தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில்களில் வடமாநில பயணிகள் அட்டூழியம்: நெறிப்படுத்த ரயில்வே காவல் படைக்கு தெற்கு ரயில்வே உத்தரவு

ரயில்களில் வடமாநில பயணிகள் அட்டுழியத்தை நெறிப்படுத்த ரயில்வே காவல் படைக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நேற்றைய தினம் திருப்பூரில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த வெளிமாநில தொழிலாளர்களால் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்த பெண்களுக்கு இடம் கிடைக்காமல் பரிதவிக்கும் காட்சிகள் வெளியாகியது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சமூக வலைதளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றசாட்டு முன்வைத்திருந்தனர். தற்போது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஏறி பயணம் செய்பவர்களை நெறிப்படுத்துவதற்கு ரயில்வே காவல் படை மற்றும் ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

Advertisement

அதன்படி முன்பதிவில்லாத பெட்டிகளில் தடுப்புகளை அமைத்து பயணிகளை வரிசையில் நெறிப்படுத்தி இரண்டாம் வகுப்பு இருக்கையில் முன்பதிவு செய்யாத பயணிகள் அமர்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் மற்ற பயணிகள் ஏறுவதை தடுக்க கூடிய வகையில் ரயில்வே பாதுகாப்பது அறையில் அணைத்து விரைவு ரயில்களிலுமே கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வடமாநிலம் செல்லக்கூடிய ரயில்கள் மற்றும் தொலைதூரம் செல்லக்கூடிய ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளும் பயனாளர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு டிக்கெட் நிறுத்தங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தங்களுக்கென்று கொடுக்கப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

முன்பதிவு பெட்டிகளில் பயணிகளின் புகார்களுக்கு டிக்கெட் பரிசோதகர்கள் நேரில் சென்று உடனடியாக சோதனை செய்வதோடு விதிகளை மீறி பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து அந்த பெட்டிகளிலிருந்து அவர்களை கீழே இறக்க வேண்டும் எனவும் மீறும் டிக்கெட் பரிசோதகர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கையை தீவிரபடுத்த இருப்பதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் பயணிகள் தொடர்புடைய புகார்களுக்கு ரயில் பாதுகாப்பில் உள்ள ரயில்வே பாதுகாப்புபடை காவலர்களை அழைத்து சரி செய்துகொள்ளுமாறும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பட்டாசுகளை எடுத்து செல்ல கூடாது. எளிதில் தீ பற்றும் பொருட்களை எடுத்து செல்ல கூடாது என்றும் தெரிவித்தனர்.

 

Advertisement

Related News