வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். வடகிழக்கு பருவமழை நிவாரணம், மீட்பு பணிகள் குறித்தும், மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக் காட்சி மூலம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனையில் நகராட்சி நிர்வாக துறை, பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement