தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் தகவல்

Advertisement

சென்னை: அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். குறுகிய காலத்தில் அதிக மழை பெய்யும் நிகழ்வு தற்போது அதிகமாக நடக்கிறது. லா-நினா உருவான கடந்த 42 ஆண்டுகளில் 29 ஆண்டுகளில் இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்கும். வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 112% கூடுதலாக பெய்யக் கூடும்.

தமிழ்நாடு, கேரளா, தெற்கு உள்கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும். நெல்லை உள்பட 17 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை, டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாக பெய்துள்ளது. கடந்தாண்டை விட 14% அதிகமாக தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. வடதமிழ்நாட்டில் இயல்பைவிட அதிகமாக வடகிழக்கு பருவமழை பெய்யக் கூடும்.

தென்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பதிவாகக் கூடும். பசிபிக் பெருங்கடலில் வெப்பத்தின் அளவு குறைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் லா-நினா உருவாக 80% வாய்ப்பு உள்ளது. லா-நினா உருவானாலும் கூட மழை அளவு பாதிக்காது என்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement