தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடகிழக்குப் பருவமழை எதிரொலியாக சென்னையில் தயார் நிலையில் 457 மர அறுவை இயந்திரங்கள்

 

Advertisement

சென்னை: வடகிழக்குப் பருவமழை எதிரொலியாக சென்னையில் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஜூலை 1 முதல் இதுவரை மழையால் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில் இருந்த 66,117 மரங்களின் கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, முதலமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை கத்தரித்து அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 17ம் தேதி காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை சராசரியாக 267.80 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், இன்று காலை 8.30 மணி முதல் காலை 11 மணி வரை சராசரியாக 5.89 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக மேடவாக்கம் சந்திப்பில் 11.40 மி.மீ. மழைப்பொழிவும் (பெருங்குடி மண்டலம்), குறைந்தபட்சமாக முகலிவாக்கம் பகுதியில் 0.60 மி.மீ (ஆலந்தூர் மண்டலம்) பெய்துள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 15 மண்டலங்களில் ஜூலை 1 முதல் இதுவரை மொத்தம் 66,117 மரங்களின் கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக 15 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள், 2 ஹைட்ராலிக் ஏணிகள், 224 கையடக்க மர அறுவை இயந்திரங்கள், 216 டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

மேலும், தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழையின் காரணமாக விழுந்த மரங்கள் மற்றும் மரங்களின் கிளைகளை அகற்றும் பணிகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 17ம் தேதி முதல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழையின் காரணமாக நேற்று வரை 55 மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இன்று மழையின் காரணமாக விழுந்துள்ள 4 மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வடகிழக்குப் பருவமழையின் காரணமாக விழும் மரங்களை உடனுக்குடன் அகற்றுவதற்காக மண்டலத்திற்கு தலா 12 பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மரக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ஒரு டாடா ஏஸ் வாகனம் என 15 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Advertisement