தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடகிழக்கு பருவமழையால் கார்த்திகை தீப அகல் விளக்கு தயாரிக்கும் பணி பாதிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே ஆர்.பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம், பில்சின்னாம்பாளையம், கோட்டூர், ஒடையக்குளம், அம்பராம்பாளையம், சமத்தூர், அங்கலகுறிச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் மண்பாண்ட தொழில் அதிகளவில் நடைபெறுகிறது.

Advertisement

வரும் டிசம்பர் 3ம் தேதியன்று கார்த்திகை தீபம் என்பதால், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பிருந்தே மண் பாண்ட தொழிலாளர்கள் பலரும், அகல் விளக்கு தயாரிப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபம் ஏற்றி வழிபட களிமண்ணால் செய்யப்படும் விளக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் பலர், விற்பனை செய்ய வாங்குவதற்காக ஆர்டர் கொடுத்திருந்தனர். இதனால் சிறியது முதல் பெரிய அளவிலான அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால் 2 வாரத்திற்கு முன்பிருந்து வடகிழக்கு பருவமழையால், அகல்விளக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இப்போது மழைக்காரணமாக, மேலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட அகல் விளக்குகளை உலர வைக்க முடியாமல், குவித்து போடவேண்டிய நிலை ஏற்பட்டது. மழைக்காரணமாக, கார்த்திகைக்கு முன்பாக ஆர்டரின்படி அகல்விளக்கு உற்பத்தி கூடுதலாக இருக்குமா என்ற நிலையிலும், மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் மட்டுமே விரைவில் உலர வைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

Advertisement

Related News