தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்சிக்குள் எந்த பிரச்னையும் கிடையாது: நயினார் பேட்டி

 

Advertisement

சென்னை: எங்கள் கட்சிக்குள் எந்த பிரச்னையும் கிடையாது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: டெல்லியில் நடந்தது பொதுவான கலந்தாலோசனை கூட்டம் தான் நடந்தது. எங்கள் கூட்டணி பலம் இழக்கவில்லை. எங்கள் கூட்டணி 2026ல் ஆட்சி அமைக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இன்னும் ஏழு மாதங்கள் தேர்தலுக்கு இருக்கிறது. பல்வேறு மாற்றங்கள் வருகின்றன. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய குறிக்கோள். ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் இருக்கிறது. எனவே நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்.

எங்கள் கட்சிக்குள் எந்த பிரச்னையும் கிடையாது. கூட்டணி பிரச்சனை குறித்து அண்ணாமலை சொன்னது சரிதான். இன்னும் தேர்லுக்கு ஏழு மாதங்கள் உள்ளன. உறுதியாக மிகப்பெரிய மாற்றங்கள் வரும். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரிடம் பேசியிருக்கிறேன். காலம் வரும்போது சரியாக வரும். பாஜ குடும்ப கட்சி அல்ல. இது தேசிய கட்சி. என்னுடைய பதவி காலம் மூன்று ஆண்டுகள் தான். நான் வருவதற்கு முன்பாக மாநில இளைஞரணி துணை தலைவராக என் மகன் இருந்தார். பாஜவில் வாரிசு அரசியல் இப்போதும் இல்லை, எப்போதும் வரப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News