தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வாய்ப்பில்லை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

 

Advertisement

புதுடெல்லி: வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய அரசு மக்களவையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. நாட்டில் வங்கி மோசடிகள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக நிலவி வந்தது. தற்போதுள்ள பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் மட்டும் கடந்த செப்டம்பர் மாதம் வரை சுமார் ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பிலான 2,246 வழக்குகள் விசாரணையில் உள்ளன. அதேபோல குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ரூ.1.03 லட்சம் கோடி மதிப்பிலான 2,347 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்பி அப்துல் காலிக் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அதில் அவர், ‘வங்கி மோசடி வழக்குகளை விரைந்து விசாரிக்கத் தனியாகச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் உத்தேசம் தற்போது ஒன்றிய அரசின் பரிசீலனையில் இல்லை’ என்று தெளிவுபடுத்தினார். மேலும் அவர் கூறுகையில், ‘தற்போதுள்ள நீதித்துறை கட்டமைப்புகளே போதுமானதாக உள்ளன; ஏற்கனவே உயர்நீதிமன்றங்களின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டார். புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்குப் பதிலாகத் தற்போதைய நடைமுறையே தொடரும் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News