வயநாட்டிற்கு இதுவரை யாரும் செல்லவில்லை பாஜவினர் கல்மனது கொண்டவர்கள்: செல்வப்பெருந்தகை விமர்சனம்
Advertisement
தற்போது வயநாட்டில் துயர சம்பவம் நடந்து 4 நாட்களாகியும் இதுவரை பிரதமர் மோடியோ, ஒன்றிய அமைச்சர்களோ, கவர்னரோ நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவில்லை. இதற்கு காரணம் அவர்கள் கல் மனது கொண்டவர்கள். மக்கள் மீது நம்பிக்கை கிடையாது, அனுதாபம் கிடையாது. வயநாடு நிலச்சரிவு பற்றி கேள்விபட்டதும் தமிழக முதல்வர் உடனடியாக ரூ.5 கோடி நிவாரணம் வழங்கியுள்ளார். யார் தேசத்து மக்களை நேசிப்பவர்கள், இருப்பவர்கள் என மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வாறு கூறினார்.
Advertisement