தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வயநாட்டிற்கு இதுவரை யாரும் செல்லவில்லை பாஜவினர் கல்மனது கொண்டவர்கள்: செல்வப்பெருந்தகை விமர்சனம்

திண்டுக்கல்: காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை திண்டுக்கலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது அவர்கள் எங்களது தந்தை இறந்தபோது எந்த மனநிலையில் நாங்கள் இருந்தோமோ, அதுபோல் தற்போது எங்களது மனநிலை உள்ளது என கூறினர். இதுதான் மனிதர்களை மனிதர்கள் நேசிப்பது. இவர்கள்தான் உண்மையான தலைவர்கள். மணிப்பூரில் துயர சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை பிரதமர் மோடி செல்லவில்லை.
Advertisement

தற்போது வயநாட்டில் துயர சம்பவம் நடந்து 4 நாட்களாகியும் இதுவரை பிரதமர் மோடியோ, ஒன்றிய அமைச்சர்களோ, கவர்னரோ நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவில்லை. இதற்கு காரணம் அவர்கள் கல் மனது கொண்டவர்கள். மக்கள் மீது நம்பிக்கை கிடையாது, அனுதாபம் கிடையாது. வயநாடு நிலச்சரிவு பற்றி கேள்விபட்டதும் தமிழக முதல்வர் உடனடியாக ரூ.5 கோடி நிவாரணம் வழங்கியுள்ளார். யார் தேசத்து மக்களை நேசிப்பவர்கள், இருப்பவர்கள் என மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வாறு கூறினார்.

 

Advertisement

Related News