தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்!

டெல்லி: நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கு தேசிய தேர்வு முகமை மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. 6 மையங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள நீட் தேர்வு புகார் குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பெண் குளறுபடி தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், டெல்லியில் உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
Advertisement

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது; சுப்ரீம் கோர்ட்டு 2018ல் வெளியிட்ட வழிகாட்டுதல்களின் படியே நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரு கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. கருணை மதிப்பெண் கொடுத்ததால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் கொடுத்துள்ளனர். நீட் தேர்வில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. எங்கும் நீட் வினாத்தாள் கசிவு என்பது நடைபெறவில்லை.

தவறான வினாத்தாள் காரணமாக 1,600 பேருக்கு மறு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. முழு தேர்வு செயல்முறையும் மிகவும் வெளிப்படையானது. நீட் முறைகேடு குறித்து விசாரிக்க யுபிஎஸ்சி முன்னாள் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்படும். தேர்வு மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குழு விசாரிக்கும். இந்த குழு, ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை வழங்கும். இந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

Advertisement