தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நொய்டா விமான நிலையத்திற்காக 14 கிராமங்களில் 4,588 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டம்: 16,000 குடும்பம் வெளியேற்றம்!!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விமான நிலைய விரிவாக்க பணிக்காக 14 கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் 16,000 குடும்பங்களை வேறு இடத்தில் குடியமர்த்தும் நிலை உருவாகி உள்ளது. டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் தொழிற்பகுதியான நொய்டாவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கத்திலும் ஜேவாரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம் முதற்கட்டமாக ஒரு ஓடுபாதையுடன் செயல்பாட்டிற்கு வர உள்ளது. நாள் ஒன்றுக்கு 150 விமானங்கள் என ஆண்டுக்கு 1கோடியே 20லட்சம் பயணிகளை கையாளும் வகையில் இந்த ஓடுபாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நான்காவது விரிவாக்க பணிகளுக்காக அப்பகுதி மக்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தும் திட்டத்திற்கு உத்தரப் பிரதேச ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக 14 கிராமங்களில் 4,588 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், 16,000 குடும்பத்தினர் அப்புறப்படுத்தப்பட உள்ளன. அவர்கள் மாங்குரோவ், அளவல்பூர் உள்ளிட்ட 6 கிராமங்களில் 1,082 ஏக்கர் பரப்பளவில் குடியமர்த்தப்பட உள்ளன. இதற்காக நில உரிமையாளர்கள் சதுர மீட்டருக்கு 4,300 இழப்பீடு பெறுவார்கள் என்றும், இது முந்தைய நில மதிப்பீட்டை விட 40% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு கட்ட விரிவாக்க பணிகள் முடிந்து முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.

நொய்டா சர்வதேச விமான நிலையம் 11,750 ஏக்கர் பரப்பளவில் 5 ஓடுபாதைகளைக் கொண்டிருக்கும். இது ஆண்டுதோறும் 30 கோடி பயணிகளை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு ரூ.5,000 கோடி என்றும் கட்டுமான செலவுகள் சுமார் ரூ.7,000 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நொய்டா விமான நிலையம் முதற்கட்டமாக வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News