தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகள் அறிவிப்பு

Advertisement

 

ஸ்டாக்ஹோம்: உலோக-கரிம கட்டமைப்பு உருவாக்கத்திற்காக, வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்புகள் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இதுவரை மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், கடந்த 1989ம் ஆண்டு முதல் முதலாக உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய சுசுமு கிடகவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம்.யாகி ஆகியோர் நோபல் பரிசை பெறுகின்றனர். உலோக கரிம கட்டமைப்பு என்பது உலோக அணுக்களையும் கரிம மூலக்கூறுகளையும் இணைத்து உருவாக்கப்படும் முப்பரிமாண கட்டமைப்பு.

இது வாயுக்களை பிடித்து வைக்கவும், சேமிக்கவும், கடத்தவும் உதவுகிறது. சுசுமு கிடகவா ஜப்பானில் உள்ள க்யோடோ பல்கலைக்கழகத்திலும், ரிச்சர்ட் ராப்சன் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஒமர் எம்.யாகி அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர்களாக உள்ளனர். இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசும், நாளை அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசில் இம்முறை அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் உள்ளிட்ட 338 போட்டியாளர்கள் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Advertisement