தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலைக்கு பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு பம்பை செல்ல அனுமதி இல்லை: திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு

Advertisement

திருவனந்தபுரம்: ஆன்லைன், உடனடி முன்பதிவு பாஸ் இல்லாமல் வரும் பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் மண்டல கால பூஜைகளுக்காக கடந்த 16ம் தேதி மாலை நடைதிறந்த அன்று முதல் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். இதுவரை 4 நாட்களில் தலா 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 20 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை.

தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனத்திற்கு வருகின்றனர். கடந்த 23ம் தேதி மிக அதிகமாக 1.17 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மறுநாளும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த மண்டல காலத்தில் இன்று காலை வரை தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் பக்தர்களை கட்டுப்படுத்துவதற்காக தேவசம் போர்டு கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் அல்லது உடனடி முன்பதிவு கட்டாயமாகும்.

இவை இரண்டும் இல்லாத பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். உடனடி முன்பதிவு முடிந்துவிட்டால் மீண்டும் அடுத்த நாள் மட்டுமே தரிசனத்திற்கு செல்ல முடியும். மறுநாள் தரிசனத்திற்கு செல்லும் வரை பக்தர்கள் தங்குவதற்கும், உணவு உள்பட வசதிகள் ஏற்படுத்தப்படும்’ என்றார்.

Advertisement

Related News