தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டாசு வெடித்ததில் தகராறு என்எல்சி தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: கஞ்சா வியாபாரி உள்பட 2 பேர் கைது

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் சூரியமூர்த்தி. இவரது மகன் பார்த்திபன்(26). என்எல்சி ஒப்பந்த தொழிலாளி. கடந்த 19ம் தேதி இரவு இவரது வீட்டு அருகே அதே பகுதியை சேர்ந்த வேலு (30), ராமர் (26) ஆகியோர் பட்டாசு வெடித்தனர். அப்போது பட்டாசு தீப்பொறி பார்த்திபன் வீட்டில் இருந்த ஆடுகளின் மீது விழுந்தது. இதை பார்த்திபன் தட்டி கேட்டதால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.

Advertisement

இதில் ஆத்திரமடைந்த வேலு, ராமர் இருவரும் பார்த்திபன் தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்தார்.

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, வேலு, ராமர் ஆகியோரை தேடி வந்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றபோது செம்மேடு கெடிலம் ஆற்று பாலத்தில் இருந்து கீழே குதித்த வேலுவின் காலில் எலும்பு முறிந்தது. அவரையும், ராமரையும் போலீசார் கைது செய்தனர். வேலு, ஏற்கனவே கஞ்சா விற்பனை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News