தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நித்யானந்தா வழக்கை 3 மாதத்தில் முடிக்க உத்தரவு

மதுரை: நித்யானந்தா மீதான வழக்கின் விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த டாக்டர் கணேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராஜபாளையம் அருகே சேத்தூர் மற்றும் கோதைநாச்சியார்புரத்தில் உள்ள எனது விவசாய நிலத்தை நித்யானந்தா தியான பீடத்திற்கு ஆன்மீகம் மற்றும் மதம் சம்பந்தமான பயன்பாட்டுக்காக தானமாக கொடுத்தேன்.

Advertisement

நித்யானந்தாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் அந்த நிலத்தை நீதிமன்றம் மூலம் திரும்ப பெற்றேன். இதனால் ஆத்திரமடைந்த நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் என்னுடைய பட்டா நிலத்திற்குள் புகுந்து ஆக்கிரமிக்கும் நோக்கில் அடாவடி செய்து வருகின்றனர். இதனால் சந்திரன் என்பவரை நிலத்தின் பாதுகாவலராக நியமித்தேன். அவருக்கும் நித்யானந்தாவின் சீடர்கள் தொல்லை கொடுத்து வந்தனர்.

சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பினர். சந்திரன் விருதுநகர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஓராண்டாகியும் விசாரணையை போலீசார் விரைவுபடுத்தவில்லை. அந்த வழக்கின் விசாரணையை விரைவாக முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், ‘‘நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் மீதான வழக்கை 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

Advertisement

Related News