தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீலகிரியில் மீண்டும் காற்றுடன் சாரல் மழை: குளிரால் பொதுமக்கள் அவதி

Advertisement

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று சற்று மழை குறைந்த நிலையில் மீண்டும் இரவு முதல் காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. குளிரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஊட்டி, கூடலூர், குந்தா மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் வாகனங்களின் மீது மரங்கள் விழுந்ததால் வாகனங்கள் சேதமடைந்தன. ஒரு சில குடியிருப்புகளும் சேதமடைந்தன. இந்நிலையில் நேற்று காலை முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால் மாலையில் ஊட்டி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது.

இதனால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு ஊட்டி-கூடலூர் சாலை சாண்டி நல்லா அருகே மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு சென்று தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். ஒரு மணி நேரத்திற்கு பின் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து துவங்கியது.

Advertisement