தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீலகிரி மாவட்டத்தை புரட்டிப்போடும் கனமழை.. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்கள் முகாம்..!!

Advertisement

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் 33 செ.மீ அளவில் அதிகனமழை பதிவாகியுள்ளது. மேல்பவானியில் 21செ.மீ கனமழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அதிகனமழையை எதிர்கொள்ளவும், பேரிடர் காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் 4 பேரிடர் மீட்பு படைகள் நீலகிரி மாவட்டத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் அமைப்பு படையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மொத்தம் 4 பேரிடர் மீட்பு படைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா 10 பேரிடர் காவலர்கள் கொண்ட மொத்தம் 4 பேரிடர் மீட்பு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி ஊட்டி, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர். அதிநவீன மீட்பு உபகரணங்களுடன் அனைத்து மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்களுடன் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அதிகனமழை எச்சரிக்கை திரும்ப பெறும்வரை அந்த மாவட்டத்தில் இருந்து தேவையான நேரத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் எந்நேரமும் தொடர்பில் இருந்து தேவையான உதவிகளையும், மீட்பு பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்று தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement