தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீலகிரி கூடலூர் அருகே 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. கூடலூர் அருகே உள்ள பகுதிகளில் கடந்த 7 வருட காலமாக ராதாகிருஷ்ணன் என்ற ஒற்றை காட்டு யானை சுற்றி திரிகிறது. இந்த காட்டுயானையானது அப்பகுதியில் 12பேரை கொன்றுள்ளது. இப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தியதன் பேரில் காட்டு யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகளான விஜய், வசீம், பொம்மன், சீனிவாசன் ஆகிய 4 கும்கி யானைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

Advertisement

அதுமட்டுமல்லாமல், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினரும், 50க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் இந்த பகுதியில் யானைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் பட்சத்தில் யானையை கொண்டு செல்வதற்காக வாகனங்களும், ஜேசிபி இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது காட்டு யானை அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து அதனை கண்காணிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Related News