தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீலகிரியில் தொடரும் மழை பயிர் செய்ய விவசாயிகள் ஆர்வம்

Advertisement

ஊட்டி : நீலகிரியில் மழை பெய்து வரும் நிலையில் அனைத்து பகுதிகளிலும் பயிர் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்ேடாபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும்.

இச்சமயங்களில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாயம் மேற்கொள்வது வாடிக்கை. அதேசமயம், டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை 6 மாதங்கள் நீலகிரியில் மழை குறைந்து காணப்படும். சில சமயங்களில் இந்த 6 மாதங்களில் மழை துளிகள் கூட விழாது.

இதனால், இச்சமயங்களில் தாழ்வான பகுதிகள் மற்றும் நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டுமே விவசாயிகள் மலை காய்கறிகளை பயிரிடுவார்கள்.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் மேற்கொள்வதை தவிர்ப்பது வழக்கம். ஜூன் மாதத்திற்கு பின்னரே விவசாயத்தை துவக்குவார்கள். ஆனால், இம்முறை கடந்த மாதம் பெரும்பலான நாட்கள் நீலகிரியில் மழை கொட்டித் தீர்த்தது.

தொடர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில், காய்கறி விவசாயிகள் பயிர் செய்ய துவங்கி விட்டனர். குறிப்பாக, இத்தலார், நஞ்சநாடு, எமரால்டு, முத்தோரை பாலாடா போன்ற பகுதிகளில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ், பூண்டு போன்ற பயிர்கள் விவசாயிகள் பயிர் செய்ய துவங்கியுள்ளனர்.

Advertisement

Related News