தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீலகிரி கலை அறிவியல் கல்லூரியில் பழங்குடியினர் பாரம்பரிய நடனத்துடன் நெல் நாற்றுநடவு பணியில் மாணவர்கள்

Advertisement

பந்தலூர் : பந்தலூர் அருகே நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பழங்குடியினர் பாரம்பரிய நடனத்துடன் நெல் நாற்றுநடவு செய்யும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். பந்தலூர் அருகே தாளூர் பகுதியில் அமைந்துள்ள நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு கல்வி கற்கும் நேரத்தை தவிர ஓய்வு நேரங்களில் விளையாட்டு மற்றும் வேளாண்மை தொடர்பான கல்வியை கற்பித்து வருகின்றனர்.

கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் காய்கறி மற்றும் இயற்கை முறையில் நெல் உற்பத்தி செய்யும் பணிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கல்லூரி வலாகத்தில் உள்ள வயலை உளுது நெல் நாற்றுநடவு செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

நிகழ்வில் கல்லூரி நிர்வாக இயக்குனர் ராசித்கஷாலி, கல்லூரி முதல்வர் பாலசண்முகதேவி, துணை முதல்வர் ரஞ்சித், பேராசிரியர்கள் மோகன்பாபு, தன்யா, செரில் வர்கீஷ், வளாக மேலாளர் உம்மர் மற்றும் பேராசிரியர்கள் பழங்குடியினரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடன் ஆடிப்பாடி நெல் நாற்றுநடவு செய்தனர்.

நிகழ்ச்சியில், மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு நாற்று நடவு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாக இயக்குனர் ராசித்கஷாலி கூறுகையில்,‘‘மாணவர்களுக்கு கல்வி என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் விவசாயம் செய்யவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் கல்லூரி வளாகத்தில் உள்ள இடங்களில் காய்கறி மற்றும் நெல் உற்பத்தி செய்வது, அதனை அறுவடை செய்வது போன்ற பணிகளிலும் ஈடுபடுத்தி வருகிறோம்’’ என்றார்.

Advertisement

Related News