தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிகிதா அளித்த புகாரின் பேரில் நகை மாயம் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு: விசாரணையில் உண்மை தெரியும்

மதுரை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது தாக்கியதில் கடந்த ஜூன் 28ல் இறந்தார். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 20ம் தேதி மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முதல் கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அப்போது, நகை காணாமல் போனதாக பேராசிரியை நிகிதா அளித்த புகார் குறித்தும் சிபிஐ தரப்பில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில், பேராசிரியை நிகிதா காரில் இருந்த நகை மாயமானதாக அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் என்ற இடத்தில் ‘அடையாளம் தெரியாதவர்’ என குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நிகிதா, தாயார் சிவகாமி மற்றும் அஜித்குமாருடன் பணியாற்றிய பணியாளர்கள், கோயில் அதிகாரிகள் மற்றும் திருப்புவனம் போலீசார் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதில்தான் உண்மையில் நகை காணாமல் போனதா, திருடியது யார் என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்க வாய்ப்புள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

Related News