தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜவில் சேராவிட்டால் கைது செய்வோம் திரிணாமுல் தலைவர்களை மிரட்டுகிறது என்ஐஏ, ஈடி: மம்தா குற்றச்சாட்டு

புருலியா: ‘திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜவில் சேர வேண்டுமெனவும், இல்லாவிட்டால் கைது செய்வோம் என ஈடி, என்ஐஏ போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் மிரட்டுகின்றன’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புருலியா மாவட்டத்தில் நேற்று நடந்த தேர்தல் பேரணியில் பேசியதாவது:
Advertisement

அமலாக்கத்துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் வருமான வரித்துறை ஆகியவை பாஜவின் ஆயுதங்களாக செயல்படுகின்றன. இத்தகைய விசாரணை அமைப்புகள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜவில் சேர வேண்டும், இல்லாவிட்டால் கைது செய்வோம் என மிரட்டுகின்றன.

முன்னறிவிப்பு இல்லாமல் ரெய்டு நடத்தி வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றனர். பெண்கள் நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது வீட்டிற்குள் நுழைந்தால் என்ன செய்வார்கள்?தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி மாநில அரசின் திட்ட விளம்பர பலகைகளில் உள்ள எனது புகைப்படத்தை மறைத்துள்ளீர்கள். ஆனால் ஒன்றிய அரசின் திட்ட விளம்பர பலகைகளில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மட்டும் மறைக்கவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

* பேரணி நடத்துங்கள் கலவரம் செய்யாதீங்க

மம்தா பேசுகையில், ‘‘வரும் 19ம் தேதி வாக்குப்பதிவுக்கு முன்பாக வரும் 17ம் தேதி ராம நவமி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பாஜ வகுப்புவாத உணர்ச்சிகளை தூண்டிவிடும். எனவே யாரும் எந்த அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபட வேண்டாம். பாஜவினரை கேட்டுக் கொள்கிறேன். பேரணி நடத்துங்கள், கலவரத்தை நடத்தாதீர்கள். கலவரத்தை தூண்டுமாறு ராமர் உங்களை கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் அதை செய்துவிட்டு, பின்னர் என்ஐஏவை கொண்டு வருவார்கள்’’ என்றார்.

Advertisement

Related News