தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதல் மனைவி சிக்கன் சாப்பிட மறுப்பு: புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை

Advertisement

திருப்பூர்: காதல் மனைவி சிக்கன் சாப்பிட மறுத்ததால், புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை புதுப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்தபோது, தன்னுடன் வேலை செய்து வந்த சுபலட்சுமி (25) என்பவரை காதலித்து இருதரப்பு பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சென்னையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.காதல் தம்பதியினர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த குட்டகாட்டு புதூரில் உள்ள சுபலட்சுமியின் சகோதரி மேனகாவின் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், மேனகாவுடன் அவருடைய கணவரும் கோயில் திருவிழாவிற்காக நேற்று திருச்சி சென்றிருந்தனர்.

அப்போது மணிகண்டன் கடையில் சிக்கன் வாங்கி வந்து சுபலட்சுமியை சாப்பிட வற்புறுத்தியுள்ளார். ஆனால் தனது சகோதரி கோயிலுக்கு சென்று இருப்பதால், வீட்டில் சிக்கன் சாப்பிட சுபலட்சுமி மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டின் விட்டத்தில் உள்ள இரும்பு கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதையறிந்த அவரது மனைவி சுபலட்சுமி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மணிகண்டனை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement