தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய தொழிலாளர் சட்டங்கள் விவகாரம்; தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை: நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உறுதி

 

Advertisement

புதுடெல்லி: புதிய தொழிலாளர் நலச்சட்டங்கள் தொடர்பான தொழிற்சங்கத்தினரின் கவலைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதியளித்துள்ளார். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நான்கு புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 சட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சட்டங்கள், ‘கார்ப்பரேட் ஜங்கிள் ராஜ்’ எனப்படும் தனியாரின் ஆதிக்கத்தை ஊக்குவிப்பதாகக் கூறி, ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

புதிய சட்டங்கள் முதலாளிகளுக்கு சாதகமாக வளைக்கப்படுவதாகவும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ‘ஜன சன்சத்’ பகுதியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, புதிய சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவதாகவும், அமைப்புகளின் வலிமையை குறைப்பதாகவும் தொழிற்சங்கத்தினர் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘தொழிலாளர்கள் மற்றும் அவர்களது அமைப்புகளின் உரிமைகளைப் பலவீனப்படுத்தவும், அவர்களின் குரலை ஒடுக்கவும் இந்த புதிய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதிநிதிகள் வேதனை தெரிவித்தனர். அவர்களின் ஆலோசனைகளை நான் கவனமாகக் கேட்டறிந்தேன். தொழிலாளர்களின் கவலைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நிச்சயமாகக் குரல் எழுப்புவேன்’ என்று உறுதியளித்துள்ளார்.

 

Advertisement

Related News