தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய ஜிஎஸ்டி வரி அமலாகும் நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி உரை: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

புதுடெல்லி: பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக வெளியான தகவலால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விகிதங்களில் மாற்றம் செய்வது தொடர்பாக கடந்த 4ம் தேதி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Advertisement

இதில், அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் பலவற்றின் மீதான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதோடு, வரி விதிப்பு முறையும் 5 மற்றும் 18 சதவீதம் என இரு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. இந்த புதிய வரி குறைப்பு அறிவிப்புகள் நாளை முதல் அமலுக்கு வர இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை 5 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், பிரதமர் அலுவலகம் தரப்பில் இருந்து இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. பிரதமரின் இந்த உரை, புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தங்கள் மற்றும் அதனால் பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கமளிப்பதாக இருக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் உரை குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக பிரதமர் அலுவலகத்தின் இணையதளம், சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் நம்பகமான செய்தி தொலைக்காட்சிகளை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Related News