கான்வார் யாத்திரையில் புதிய சர்ச்சை உணவு கடைகளில் உரிமையாளர் பெயர், முகவரி கட்டாயம்: உபி, உத்தரகாண்ட் அரசுகளின் உத்தரவால் பரபரப்பு
Advertisement
இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது முசாபர்நகர் போலீசாரின் உத்தரவை உபி, உத்தரகாண்ட் அரசுகள் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளன. இந்த யாத்திரை ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறும்.உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், ரிஷிகேஷ், நீல்கந்த், கங்கோத்திரி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் வழிபடுவார்கள். ஆனால் திடீரென கடைகளில் உரிமையாளர் பெயர் மற்றும் அனைத்து விவரங்களையும் பதிவிட உத்தரவிட்டது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
Advertisement