தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் ரூ.1.25 லட்சம் கோடி கேட்டு டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: நீதிபதி கடும் கண்டனம்

வாஷிங்டன்: நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்த 15 பில்லியன் டாலர் அவதூறு வழக்கை, அது தாக்கல் செய்யப்பட்ட விதத்தைக் காரணம் காட்டி நீதிபதி தள்ளுபடி செய்தார். பிரபல ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை, அதன் நான்கு பத்திரிகையாளர்கள் மற்றும் பதிப்பகம் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1.25 லட்சம் கோடி ரூபாய்) நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். தனது தந்தை சொத்தை வீணடித்து, வெற்றிகரமானவர் என்ற மாயையை டிரம்ப் உருவாக்கினார் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர்கள் எழுதிய புத்தகம் மற்றும் தனது நிதிநிலை குறித்த கட்டுரைகள் பொய்யானவை என்றும், தனது புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்குடன் வெளியிடப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

Advertisement

மேலும், அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சி இது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், 85 பக்கங்கள் கொண்ட இந்த வழக்கை விசாரித்த புளோரிடா மாகாண மத்திய நீதிமன்ற நீதிபதி ஸ்டீவன் மெரிடே, அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு மனு, சட்ட விதிகளைப் பின்பற்றாமல், தேவையற்ற வசைபாடும் வார்த்தைகளுடன் மிக நீளமாக உள்ளது. ‘நீதிமன்றம் என்பது அரசியல் பேரணிகளில் பேசுவதற்கான மேடையோ, விளம்பரத்திற்கான ஒலிபெருக்கியோ அல்ல’ என்று நீதிபதி தனது உத்தரவில் கடுமையாகக் கண்டித்துள்ளார். இருப்பினும், இந்த வழக்கை முழுமையாக முடித்து வைக்காமல், 28 நாட்களுக்குள் 40 பக்கங்களுக்கு மிகாமல், கண்ணியமான முறையில் திருத்தப்பட்ட புதிய மனுவைத் தாக்கல் செய்ய டிரம்பின் வழக்கறிஞர் குழுவுக்கு நீதிபதி அவகாசம் வழங்கியுள்ளார். நீதிபதியின் இந்த உத்தரவை வரவேற்பதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Advertisement