தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காததால் நியூசிலாந்து அமைச்சர் வீட்டின் மீது தாக்குதல்

ஆக்லாந்து: பாலஸ்தீன விவகாரத்தில் நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சரின் வீட்டில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடியாது என நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன்பு சில போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், நேற்று ஆக்லாந்தில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

Advertisement

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் வீட்டில் இல்லை. ஆனால், அவரது மனைவி மற்றும் விருந்தினர் ஒருவர் இருந்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர், அமைச்சரின் வீட்டு ஜன்னலை இரும்புக்கம்பியால் அடித்து நொறுக்கியதுடன், ‘உண்மையான உலகிற்கு வரவேற்கிறோம்’ என்ற வாசகம் அடங்கிய குறிப்பையும் வாசலில் விட்டுச் சென்றுள்ளார்.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, 29 வயது இளைஞர் ஒருவர் தாமாக முன்வந்து சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், துணைப் பிரதமர் டேவிட் சேமோர், எதிர்க்கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News