தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்கா புதிய உத்தரவு; இந்தியர்களுக்கு பாதிப்பு

புதுடெல்லி: அமெரிக்க குடியேற்றமற்ற விசாக்களுக்கு இனிமேல் இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டில் மட்டுமே நேர்காணலுக்கு முன்பதிவு செய்ய முடியும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்தியாவில் அமெரிக்க விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் மூன்று ஆண்டுகள் வரை நீண்டது. இதனால், அவசரமாக அமெரிக்கா செல்ல வேண்டிய இந்தியர்கள், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து, அங்குள்ள அமெரிக்கத் தூதரகங்களில் எளிதாக நேர்காணல் தேதியைப் பெற்று வந்தனர்.

Advertisement

குறிப்பாக, வர்த்தகம் மற்றும் சுற்றுலா விசாக்களுக்கு பாங்காக் மற்றும் பிராங்பேர்ட் நகரங்களும், தற்காலிகப் பணியாளர் விசாக்களுக்கு பிரேசில் மற்றும் தாய்லாந்து நகரங்களும் முக்கிய மையங்களாக விளங்கின. இந்த நடைமுறை, நீண்ட காத்திருப்பு காலத்தைத் தவிர்க்கப் பெரிதும் உதவியாக இருந்தது. இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் விசா விதிகளில் புதிய, கடுமையான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த புதிய உத்தரவின்படி, குடியேற்றமற்ற விசாக்களுக்கு விண்ணப்பிப்போர், இனி தங்களது சொந்த நாட்டில் அல்லது தாங்கள் சட்டப்பூர்வமாக வசிக்கும் நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில்தான் நேர்காணலுக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் சுற்றுலா மற்றும் வர்த்தக விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் சென்னையில் ஒன்பது மாதங்கள் வரையிலும், பிற நகரங்களில் மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரையிலும் உள்ளது. இந்த புதிய விதிமுறையால், அவசரப் பயணம் மேற்கொள்ள வேண்டிய இந்தியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மேலும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 79 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் உட்பட அனைவருக்கும் நேரடி நேர்காணல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Advertisement