தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழ்நாட்டில் மழை தொடரும்

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வருவதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் 6ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்மேற்கு பருவமழை காரணமாகவும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் நேற்று அனேக இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், நேற்று காலையில் 28டிகிரி செல்சியசுடன் வெப்பநிலை தொடங்கியது. மதியம் 34 டிகிரியாக வெப்பநிலை இருந்தாலும் அது 38 டிகிரி செல்சியஸ்(100 டிகிரி பாரன்ஹீட்) ஆக உணரப்பட்டது. நேற்று , சராசரியாக 28 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ்(95டிகிரி பாரன்ஹீட்) வரையில் இருந்தது.

இந்நிலையில், வங்கக் கடலின் வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய மியான்மர் கடலேராப் பகுதியை ஒட்டிய கடல் மட்டத்தில் இருந்து 5.8கிமீ வரை, தென்மேற்கு பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக அது மேலும் வலுப்பெற்று வடக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும், வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மியான்மர் கடலோரப் பகுதியின் மேலே வடக்கு கடலோரப் பகுதியில் இருந்து ஒடிசா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்றும் உருவாகிறது.

அந்த பகுதியின் கீழ் வெப்பமண்டலப் பகுதியில் மிதமான மற்றும் மேற்கு தென்மேற்கு திசையில் இருந்தும் காற்று வீசுகிறது. இந்த நிகழ்வுகளின் காரணமாக தமிழகத்தில் நேற்று அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை 6ம் தேதி வரை நீடிக்கும்.

Advertisement