தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளச்சல் துறைமுகத்தில் ரூ.10 லட்சத்தில் புதிய மீனவர் ஓய்வறை

*பிரின்ஸ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

Advertisement

குளச்சல் : குளச்சல் நகராட்சி 23வது வார்டு துறைமுகத்தில் மீனவர்கள் ஓய்வெடுக்கும் அறை ஓலையால் வேயப்பட்டிருந்தது. இந்த ஓலை கொட்டகை கடந்த பல நாட்களாக சேதமடைந்து காணப்பட்ட நிலையில், இதனை சீரமைக்க வேண்டும் என குமரி கிழக்கு மாவட்ட மீனவர் காங். தலைவர் ஸ்டார்வின் மற்றும் வார்டு கவுன்சிலர் ஜாண் பிரிட்டோ ஆகியோர் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்சிடம் கோரிக்கை விடுத்தனர்.

இவர்களது கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட்டிலான புதிய ஓய்வறை கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து புதிய ஓய்வறைக்கு நகர்மன்ற தலைவர் நசீர் தலைமையில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட காங்.தலைவர் கே.டி.உதயம் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர்.

மீனவர் காங். தலைவர் ஸ்டார்வின், நகர்மன்ற துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், கவுன்சிலர் ஜாண் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காங். துணைத்தலைவர் தர்மராஜ், மாவட்ட அமைப்பு தலைவர் சாமுவேல் சேகர், அகில இந்திய காங்.கமிட்டி உறுப்பினர் விஜிலியஸ், மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், கவுன்சிலர்கள் மேரி, பனிக்குருசு, ரமேஷ், சுஜித்திரா மற்றும் அந்திரியாஸ், லாலின், ஷாபி, பசீர்கான் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News