தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊழலை ஒருபோதும் ஆதரிக்க கூடாது: வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி அறிவுரை

Advertisement

சென்னை: நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பொய்க்கும் வகையில் ஊழலை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது என்று புதிய வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் அறிவுரை வழங்கினார். நாட்டின் 75வது அரசியல் சாசன தினம் மற்றும் புதிய வழக்கறிஞர்கள் பதிவு நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டது. 1,200 சட்ட பட்டதாரிகள் வழக்கறிஞர்களாக பதிவு செய்துகொண்டனர். நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் பேசியதாவது: வழக்கறிஞராக பணியாற்றும் போது ரகசியம் காக்க வேண்டும்.

கட்சிக்காரர்களின் ரகசியம் நிழலுக்கு கூட தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து படிக்க வேண்டும். நல்ல நடத்தையை கொண்டிருக்க வேண்டும். உணர்வுகளுக்கு பலியாகாமல் திறம்பட செயல்பட வேண்டும். நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் அதை பொய்க்கும் வகையில் ஊழலை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது. நீதிமன்றங்களுக்கு, நீதிபதிகளுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும். வாழ்நாளில் ஒரு குழந்தைக்காவது கல்வி வழங்க வேண்டும், பணத்தைத் தேடி ஓடுவதை விடுத்து, குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். அரசியல் சட்டத்தை நிலை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement