தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேபாள வன்முறை; ஆட்சி கவிழ காரணம் விபத்தா..என்ன நடந்தது?

காத்மாண்டு: நேபாளத்தில் ஆட்சி கவிழ, கார் விபத்தில் 11 வயது சிறுமி உயிரிழந்தது என தெரிய வந்துள்ளது. நேபாள நிதி அமைச்சரின் கார் 11 வயது சிறுமி மீது மோதியது இது தொடர்பான சிசிடிவி வீடியோ வைரலானது. 11 வயது சிறுமி மீது நிதி அமைச்சரின் கார் மோதிய விபத்தை மறைக்க அரசு முயன்றதாக தகவல் வெளியானது. சிசிடிவி வீடியோ வைராலனதை அடுத்து சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது. சமூக ஊடகங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து GEN Z இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

Advertisement

GEN Z இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழக்கவே போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டத்தின்போது நாடாளுமன்றம், பிரதமரின் இல்லம், அமைச்சர்களின் வீடுகளுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர். இளைஞர்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து பிரதமர் சர்மா ஒலி, ஜனாதிபதி அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். தொடர்ந்து இன்றும் கலவரம் நீடித்து வருவதால் நேபாளத்தில் பாதுகாப்புக்கான பொறுப்பை அந்நாட்டு ராணுவம் ஏற்றுள்ளது.

போராட்டத்தை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி நேபாள ராணுவ தளபதி அழைப்பு விடுத்தார். கலவரத்தால் நாட்டின் பொது சொத்து சேதப்படுத்தப்படுவது கவலையளிக்கிறது என நேபாள ராணுவ தளபதி வேதனை தெரிவித்தார். நாட்டின் அமைதி, பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் திரும்ப வேண்டும். வன்முறை, கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேபாள வன்முறை தொடர்பான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

Advertisement

Related News