தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தை பயன்படுத்தி தப்பிய 13,000 சிறைக்கைதிகள்: மீண்டும் சரண் அடைந்த ஒரே ஒரு கைதி!

காத்மாண்டு: நேபாளத்தில் இடைக்கால தலைவர் நியமனம் தொடர்பான கருத்து வேறுபாட்டால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கிளர்ச்சியை பயன்படுத்தி நாட்டின் 77 மாவட்டங்களில் இருந்து 13,000 சிறை கைதிகள் தப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்கள் மீதான தடை காரணமாக நேபாளத்தில் கடந்த 8ம் தேதி GEN Z தலைமுறையினர் தொடங்கிய போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இதில் இதுவரை 34 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

இதனிடையே பிரபல ரேப் பாடகரும், காத்மாண்டுவின் மேயருமான 35 வயது இளைஞர் பாலேந்திர ஷாவை இடைக்கால தலைவராக நியமிக்க வேண்டும் என்று போராட்ட குழுவினர் வலியுறுத்தினர். பின்னர் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியான சுசீலா கார்கியின் பெயர் அரசு தலைமை பதவிக்கு முன்வைக்கப்பட்டது. நேபாள அரசியல் அமைப்பு சட்டப்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் அதிபர், பிரதமர் போன்ற அரசியல் தலைமை பதவியை வகிக்க முடியாது என்பதால், வேறு பெயர்களை பரிந்துரைக்கும்படி ராணுவ தளபதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இளைஞர் குழுவில் ஒரு தரப்பினர் சுசீலாவுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் சூழலில், மற்றொரு தரப்பினர் மேயர் பாலேந்திர ஷாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் அமைப்பு சட்டம் அனுமதிக்காவிட்டாலும் சுசீலா கார்கியே தற்போது தேவை என்று மற்றொரு தரப்பினர் கருதுகின்றனர். நாட்டின் மின்சார நெருக்கடியை சமாளித்த மின்சாரத்துறை பொறியாளர் குல் மான் கீசிங் என்பவரின் பெயரும் இடைக்கால தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இளைஞர்கள் போராட்டத்தை பயன்படுத்தி 77 மாவட்டங்களில் உள்ள சிறைகளில் இருந்து 13,000 கைதிகள் தப்பியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தங்காடி பகுதியில் உள்ள சிறையில் இருந்து 692 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், ஒரே ஒரு கைதி மட்டும் மீண்டும் வந்து சரணடைந்துள்ளார். அடுத்த ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு தண்டனைக் காலம் அதிகரிக்கப்படலாம் என்ற அச்சத்தில் சரண் அடைந்ததாக அவர் விளக்கமளித்தார்.

Advertisement

Related News