தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலவரத்தை பயன்படுத்தி நேபாள சிறைகளில் இருந்து தப்பிய 13,000 கைதிகள் : இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 35 பேர் கைது!!

காத்மாண்டு : நேபாள சிறைகளில் இருந்து தப்பிய கைதிகளில் 35 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது, பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்து அந்த நாட்டு அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அது கலவரமாக மாறியது.நாடாளுமன்றம் கொளுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அதிபர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் என மூத்த தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

Advertisement

இதனிடையே நேபாளத்தில் அரசுக்கு எதிராக நடந்த இளைஞர்கள் போராட்டத்தில் வெடித்த கலவரத்தை பயன்படுத்தி, அந்நாட்டில் பல்வேறு சிறைகளில் இருந்து 13,000 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் இந்தியாவில் ஊடுருவக் கூடும் என்பதால் இந்தியா - நேபாளம் எல்லையில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய எல்லைகளில் 35 நேபாள கைதிகள் பிடிபட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச எல்லையில் 22 கைதிகள், பீகார் எல்லையில் 10 கைதிகள், மேற்கு வங்க எல்லையில் 3 கைதிகள் இந்தியாவில் நுழைய முயன்ற போது, கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News