தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெமிலி அடுத்த புன்னையில் ரூ.75 லட்சம் செலவில் கூடுதல் சுகாதார நிலைய கட்டிடம்

*அமைச்சர், கலெக்டர் அடிக்கல் நாட்டினர்

Advertisement

நெமிலி : நெமிலி அடுத்த புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் சுகாதார நிலைய கட்டிடம் கட்ட அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் சந்திரகலா ஆகியோர் அடிக்கல் நாட்டினர். நெமிலி அடுத்த புன்னையில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினம்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதி இல்லாததால் கூடுதல் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்பேரில் நெமிலி பேரூராட்சியில் 15-வது நிதி ஆணைய சுகாதார மானியம் 2025-26 திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் சுகாதார நிலையம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

இதில் கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் சந்திரகலா ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். அப்போது, சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம், பேரூராட்சித் தலைவர் ரேணுகாதேவி சரவணன், துணைத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், செயல் அலுவலர் எழிலரசி, தாசில்தார் ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் ரவீந்திரன், பெருமாள், மணிவண்ணன், நகரச் செயலாளர் ஜனார்த்தனன், வர்த்தக அணி அமைப்பாளர் ராகேஷ் ஜெயின், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News