நெல்லூரில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: பல ரயில்கள் தாமதமாக இயக்கம்
Advertisement
பல ரயில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மூன்றாவது வழித்தடத்தில் அவசர ரயில்களை அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர். இவை தவிர மற்ற ரயில்களுக்கு இடையூறு ஏற்படாமல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில், விஜயவாடா நோக்கி செல்லும் பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் சில மணித்தியாலங்களில் ரயில் சேவைகள் வழக்கம் போன்று ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement