தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லை மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் திட்டமிட்டு கொன்றுவிட்டு இங்கு வந்து எரித்துள்ளனர்: கே.எஸ்.அழகிரி பகீர் பேட்டி

திசையன்விளை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று காலை திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமார் இல்லத்திற்கு வந்தார். அங்கு அவரது மகன்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நடந்தது திட்டமிட்ட கொலை தான். வெளியிடத்தில் கொலை செய்துவிட்டு இங்கு உடலை கொண்டு வந்து எரித்துள்ளனர். தொழில் ரீதியான கொலையாளிகள், அதாவது கூலிப்படையினர் தான் இதை செய்திருக்க வேண்டும். தமிழக காவல்துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். விரைவாக குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறோம். கொலை என்பது உறுதி. இதைத் தவிர நான் வேறு எதுவும் சொல்ல முடியாது. இதை அரசியலாக்க விரும்பவில்லை. காவல்துறை தான் இந்த கொலை குறித்த ரகசியத்தை மீட்டெடுக்க வேண்டும். ஜெயக்குமார் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவரது கஷ்டங்கள் குறித்து என்னுடன் எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை. அவர் எழுதிய கடிதங்களை நானும் பார்த்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

Advertisement