தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லை அருகே பரபரப்பு ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை: பள்ளி வேன்களுக்கு தீ, உறவினர்கள் மறியல், 50 பேர் மீது வழக்கு

வீரவநல்லூர்: நெல்லை அருகே ஆசிரியர் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எதிரொலியாக பள்ளி வேன்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். மறியலில் ஈடுபட்ட தந்தை உட்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே மானாபரநல்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கரகுமார் (45), விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது மகன் சபரிகண்ணன் (15).
Advertisement

அங்குள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அவரை கடந்த 4ம் தேதி பள்ளி ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த அவர், கடந்த 7ம் தேதி பள்ளிக்கு வந்ததும் வயலுக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். மைதானத்தில் பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தபோது சபரிகண்ணன் மயங்கி விழுந்தார்.

ஆசிரியர்கள் அவரை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சபரி கண்ணனை மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 10 நாட்கள் சிகிச்சையில் இருந்த சபரி கண்ணன், நேற்று முன்தினம் காலை பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து சபரிகண்ணனின் உறவினர்கள் நெல்லை-அம்பை மெயின்ரோட்டில் வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு மாணவனின் உடல் வந்த ஆம்புலன்சுடன் நேற்று முன்தினம் இரவு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீஸ் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவன் தற்கொலைக்கு காரணமான பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தினர்.

உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சபரிகண்ணனின் உறவினர்கள் மறியலை கைவிட்டு மானாபரநல்லூர் சுடுகாட்டில் மாணவனின் உடலை தகனம் செய்தனர். இந்நிலையில் இரவு 11.30 மணி அளவில் பள்ளியின் பக்கவாட்டு வழியே வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 பள்ளி வேன்களுக்கு தீ வைத்துள்ளனர். இதில் 2 வேன்களும் முற்றிலும் கருகி நாசம் அடைந்தன.

தகவலறிந்து சேரன்மகாதேவி தீயணைப்பு வீரர்கள் வந்து தீ வகுப்பறைகளுக்கு பரவாமல் அணைத்தனர். இதையடுத்து மாணவனின் மரணம் குறித்து ஒரு வழக்கு, சாலை மறியலில் ஈடுபட்டதாக மாணவனின் தந்தை, வக்கீல்கள் 4 பேர் உள்பட 50 பேர் மீது ஒரு வழக்கு, வேன் தீவைப்பு சம்பவம் தொடர்பாக ஒரு வழக்கு என 3 வழக்குகள் பதிந்துள்ளனர்.

பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தை வைத்து விசாரித்ததில் வேன்களுக்கு தீ வைத்த அரிகேசவநல்லூரை சேர்ந்த கல்லூரி மாணவன் அரிகரன் (18) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வெள்ளங்குளியை சேர்ந்த கல்லூரி மாணவன் அருண் (18) என்பவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

Advertisement

Related News