தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லையில் அதிகாலை சிறகடித்த `ஈசல்கள்’ கூட்டம்: வாகன ஓட்டிகள் திணறல்

நெல்லை: நெல்லையில் நேற்று பெய்த மழை காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதலே ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பறந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று (வியாழன்) மாலையில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது.

Advertisement

மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாநகரின் பிரதான பகுதியான வண்ணார்பேட்டையில் பல சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. நேற்றைய மழை காரணமாக நெல்லை மாநகரில் இன்று காலை முதலே ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பறந்தன. நெல்லையப்பர் நெடுஞ்சாலை, திருவனந்தபுரம் சாலை, வண்ணார்பேட்டை பைபாஸ் சாலைகளில் வாகன ஓட்டிகளின் கண்களை மறைக்கும் அளவிற்கு ஈசல்கள் பெருக்கெடுத்து பறந்தன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

அதிகாலையில் எழுந்து நடை பயிற்சி மேற்கொள்வோரும், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளும் ஈசல்களை கைகளால் விரட்டிக் கொண்டே நடந்து சென்றனர். வாகன ஓட்டிகள் தலையில் ஹெல்மெட் இல்லாமல் பயணிக்க முடியாத அளவுக்கு ஈசல்கள் மொய்த்தன. காலை 8 மணிக்கு சூரிய வெளிச்சம் காரணமாக ஈசல்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. அதன் பிறகே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

Advertisement

Related News