தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு: பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை: நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் வரை வியாழன் ேதாறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நெல்லையில் இருந்து சென்னைக்கு தற்போது வியாழன் தோறும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வியாழன் தோறும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் சனிக்கிழமை நெல்லைக்கு காலை 7.10 மணிக்கு வந்து சேரும். இந்த ரயில்களின் சேவைகள் இருமார்க்கத்திலும் நேற்றோடு நிறைவு பெற்றன. இந்நிலையில் ஜூன் மாதத்திலும் இந்த ரயில் சேவைகள் நீட்டிப்பு செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து வரும் 6ம் தேதி வியாழன் முதல் 27ம் தேதி வரை 4 சேவைகளும், மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து வரும் 7ம் தேதி தொடங்கி, 28ம் தேதி வரை 4 சேவைகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

இதுபோல் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு மற்றொரு சிறப்பு ரயிலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. முன்பு கேரள மார்க்கமாக இயங்கிய இந்த ரயில், தற்போது தமிழகம் வழியாக இயக்கப்பட உள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து வரும் 9ம் தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.15 மணிக்கு இந்த ரயில் புறப்படுகிறது. வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இந்த ரயில் சென்னை எழும்பூருக்கு திங்கள் கிழமை காலை 11.15 மணிக்கு போய் சேரும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து வரும் 10 மற்றும் 24ம் தேதிகளில் திங்கள் கிழமை மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் செவ்வாய்கிழமை காலை 3.15 மணிக்கு நாகர்கோவில் போய் சேரும். நெல்லை வழியாக இரு சிறப்பு ரயில்கள் இம்மாதத்தில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement