தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் காலை உணவாக வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டுகள் கிடந்ததால் பயணிகள் அதிர்ச்சி!!

நெல்லை : நெல்லை - சென்னை வந்தடைந்த வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவில் வண்டுகள் செத்து கிடந்த வீடியோ வைரலாகி வருகிறது. நெல்லையில் இருந்து சென்னைக்கு வாரம்தோறும் 6 நாட்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து இன்று காலை இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழக்கம் போல் காலை உணவு வழங்கப்பட்டது. அதில் சாம்பாரில் வண்டுகள் செத்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் உணவு வழங்கும் ஊழியர்களிடம் வண்டுகளை காண்பித்து முறையிட்டனர்.

அவர்கள் பயணிகளை சமரசம் செய்துள்ளனர். சாம்பாரில் கிடந்த வண்டுகளை காண்பித்து சக பயணிகளும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் ஊழியர்கள் மன்னிப்பு கேட்டனர்.இதனிடையே சாம்பாரில் வண்டு கிடந்தது குறித்து பயணிகள் ஆதாரத்தோடு பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வந்தே பாரத் ரயில் கட்டணம் அதிகம் என்றும் அதில் உணவுக்காக ரூ.200 கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் வந்தேபாரத் ரயிலில் வழங்கிய சாம்பாரில் கிடந்த வண்டுகளை பயணிகள் பலர் கடுகு என நினைத்து சாப்பிட்டு விட்டதாக வேதனை அடைந்துள்ளனர்.

Related News