நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் காலை உணவாக வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டுகள் கிடந்ததால் பயணிகள் அதிர்ச்சி!!
அவர்கள் பயணிகளை சமரசம் செய்துள்ளனர். சாம்பாரில் கிடந்த வண்டுகளை காண்பித்து சக பயணிகளும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் ஊழியர்கள் மன்னிப்பு கேட்டனர்.இதனிடையே சாம்பாரில் வண்டு கிடந்தது குறித்து பயணிகள் ஆதாரத்தோடு பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வந்தே பாரத் ரயில் கட்டணம் அதிகம் என்றும் அதில் உணவுக்காக ரூ.200 கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் வந்தேபாரத் ரயிலில் வழங்கிய சாம்பாரில் கிடந்த வண்டுகளை பயணிகள் பலர் கடுகு என நினைத்து சாப்பிட்டு விட்டதாக வேதனை அடைந்துள்ளனர்.