தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நெல்லை தனிப்படை போலீசார் அதிரடி சோதனை; ராக்கெட் ராஜா வீட்டில் துப்பாக்கி பறிமுதல்: குமரியில் பதுங்கி இருந்த கூட்டாளி கைது

நெல்லை: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியும், ராக்கெட் ராஜாவின் கூட்டாளியுமான ஜேக்கப் நேற்று நெல்லை தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து ராக்கெட் ராஜா வீட்டில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் துப்பாக்கி, மான்ெகாம்பு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்லை அருகே தாழையூத்தை சேர்ந்தவர் ஜேக்கப் (37). ராக்கெட் ராஜா கூட்டாளி. இவர் பாளையங்கோட்டை சிறையில் முத்து மனோ கொலை வழக்கிலும், பிரபல ரவுடி சிந்தா சரவணன் கொலை வழக்கிலும் தொடர்புடையவர். கடந்த சில நாட்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், தலைமறைவாக இருந்து வந்தார். போலீசார் இவரை தேடி வந்த நிலையில், இவர் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வந்தன. வள்ளியூர் சரக டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில், நெல்லை மாவட்ட எஸ்பி. சிலம்பரசனின் தனிப்படையினர் அங்கு சென்று ஜேக்கப்பை கைது செய்தனர்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து தாழையூத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில், தனிப்படையினர் திசையன்விளை ஆனைக்குடியில் உள்ள ராக்கெட் ராஜா வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு போலீசார் சோதனையிட்டபோது ஒரு நாட்டு துப்பாக்கி, மான் கொம்பு, அரிவாள்கள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் பழிக்குப்பழியாக யாரையாவது கொலை செய்யும் நோக்கத்தோடு ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News