தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லை சந்திப்பு பகுதியில் சென்டர் மீடியனை உடைத்து நடைபாதை

*விபத்து ஏற்படும் அபாயம்

Advertisement

நெல்லை : நெல்லை சந்திப்பில் இருந்து வண்ணார்பேட்டை, பாளை பஸ்நிலையம் செல்லும் பஸ்கள் பழைய தாமிரபரணி ஆற்றுப்பாலம் வழியாகவும், இதுபோல் பாளை, வண்ணார்பேட்டையில் இருந்து நெல்லை சந்திப்பு பகுதிக்கு வரும் வாகனங்கள், பஸ்கள் புதிய ஆற்றுபாலத்தின் வழியாகவும் இயக்கப்பட்டு வருகிறது.

இதற்காக அண்ணா சிலையில் இருந்து வண்ணார்பேட்டை வரை சென்டர் மீடியம் அமைக்கப்பட்டு இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் எப்போதும் எதிரெதிர் அதிக வாகன போக்குவரத்து காணப்படுகிறது.

இந்நிலையில் தாமிரபரணி ஆற்று பாலத்தின் மேற்கு பகுதியில் சென்டர் மீடியனை அகற்றி இருசக்கர வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சந்திப்பு பகுதியில் இருந்து வண்ணார்பேட்டை செல்லும் இருசக்கர வாகனங்களும், வண்ணார்பேட்டையில் இருந்து சந்திப்பு நோக்கி வரும் இரு சக்கர வாகனங்களும் இப்பகுதியில் திடீரென திரும்பி செல்வதால் விபத்து அபாயம் காணப்படுகிறது.

இந்நிலையில் தேவர் சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து பொதுமக்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செல்லும் வகையில் சென்டர் மீடியத்தை இரவோடு இரவாக உடைத்து நடைபாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் சாலையில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு அடிக்கடி கடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த குறுகிய சாலையில் பொதுமக்கள் அடிக்கடி சாலையை கடந்து செல்வதில் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement