தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லை 4 வழிச்சாலை பணியை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

*விரைந்து முடிக்க உத்தரவு
Advertisement

தியாகராஜநகர் : நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு, தெற்கு பைபாஸ் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.நெல்லை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு சாலை விரிவாக்க திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மிக முக்கிய பணியாக நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு, தெற்கு பைபாஸ் சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சுமார் 4.4 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் 51 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த பணி 50 சதவீதத்தை நெருங்கியுள்ளது. மேலும் 50 சதவீத பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது. இந்த சாலை பணி காரணமாக வடக்கு, தெற்கு பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே சாலை பணியை தங்கு தடை இன்றி விரைவில் முடிக்க வேண்டும் என மாநகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து கடந்த 17ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக 4 வழி சாலை பணியை நெல்லை வட்ட நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயராணி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய உயர் மட்ட பாலத்திற்கு இணையாக புதிய உயர்மட்ட பாலப்பணிகள் நடைபெறுவதை பார்வையிட்ட கண்காணிப்பு பொறியாளர், பணியின் முன்னேற்றம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் பணிகளை தாமதம் இன்றி விரைந்து மேற்கொள்ள உரிய ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது கோட்ட பொறியாளர் முத்துக்குமரன், உதவிக்கோட்ட பொறியாளர் சண்முகநாதன், உதவி பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Advertisement

Related News