தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்ற தந்தை, மகன் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுத்திட மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் போலீசார், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் பகுதியில் உள்ள மளிகை கடையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
Advertisement

அப்போது, யுவராஜ் (30) என்பவரின் கடையில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரத்தை அடுத்த சதாவரம் பகுதியில் யுவராஜின் தந்தை ரகுபதி (56) குட்கா விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது.

இதனையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைதான யுவராஜை சிவகாஞ்சி காவல் நிலையத்திலும், தந்தை ரகுபதியை காஞ்சி தாலுகா காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 100 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 50 கூல்லிப் பாக்கெட்டுகள், 48 விமல் என மொத்தம் 198 தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, கைதான 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News