தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழன் தோறும் தேங்காய், கொப்பரை ஏலம்

*கண்காணிப்பாளர் அறிவிப்பு

Advertisement

கிணத்துக்கடவு : நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராம கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் தங்கள் விளை பொருள்களை இருப்பு வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெகமம் ஒழுங்குமுறைவிற்பனை கூடத்தில் நாளை (9ம் தேதி) முதல், வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று, தேங்காய் மற்றும் கொப்பரை மறைமுக ஏலம் நடக்கிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

எனவே தேங்காய் மற்றும் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் அவற்றை தரம் பிரித்து நாளை (வியாழன்) காலை 9 மணிக்குள் கொண்டு வர வேண்டும்.வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்ட விளை பொருட்களுக்குரிய தொகையை உடனடியாக வழங்கப்படும்.

எனவே விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதில் கலந்து கொள்ளும் விவசாயிகள், ஆதார் கார்டு மற்றும் பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் ஆகியவற்றை விற்பனை கூட அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

Advertisement

Related News