தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முதுநிலை நீட் தேர்வு எழுத தமிழ்நாட்டிலேயே மையம் ஒதுக்கீடு: தேசிய தேர்வு வாரியம்

Advertisement

டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முதுநிலை நீட் தேர்வு எழுத தமிழ்நாட்டிலேயே மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்காக எம்.பி.க்கள் வில்சன், சச்சிதானந்தம் ஆகியோர் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை அணுகினர். அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து திமுக எம்.பி. வில்சன் தேர்வு மையங்களை மாற்றக் கோரி மனு அளித்திருந்தார்.

எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு மையங்களை மாற்றி தேசிய தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்சி மற்றும் அரியலூரைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு ஆந்திரா மாநிலம் கர்னூலில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அவர்களுக்கு கரூர் மற்றும் திருச்சியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் தேர்வு எழுத இருந்த பெண் மருத்துவர்கள் பலருக்கும் தமிழ்நாட்டிலேயே மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 31ஆக இருந்த தேர்வு மையங்கள் 17ஆக குறைக்கப்பட்டதே வெளி மாநிலங்களில் மையம் ஒதுக்க காரணம்.

தேர்வு விண்ணப்பத்தில் குறிப்பிட்ட 4 மையங்களில் ஒன்றை ஒதுக்காமல் வேறு மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டது. மையங்கள் மாற்றப்பட்டது தொடர்பாக தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என தேசிய தேர்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Related News