தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம்: கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

Advertisement

டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டு, ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவுகள் வௌியாகின. இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு, ஒரே மாநிலத்தில் அதிகம் பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்று தேர்ச்சி, கருணை மதிப்பெண்கள் வழங்கியது உள்ளிட்ட விவகாரங்கள் நீட் தேர்வு முறைகேடு குறித்த பிரச்னைகளை பூதாகரமாக்கி உள்ளன. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டில் எழுந்த முதல் குரல், நாடுமுழுவதும் வலுப்பெற்று வருகிறது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் போராட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நீட் முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய அரசு மவுனமாக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் நடந்த முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

அனைத்து மாநில தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். நீட் தேர்வில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தொடர் மௌனத்தை கண்டித்து நீதி கேட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Related News