தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீட் முடிவுகள் வெளியான நிலையில் 21ம் தேதி இளங்கலை மருத்துவ கலந்தாய்வு: வகுப்புகள் தொடங்கும் நாளும் அறிவிப்பு

Advertisement

புதுடெல்லி: தேசிய தேர்வுகள் முகமை நடத்திய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வை நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இத் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியானது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய ‘நீட்’ இளங்கலைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அடுத்தகட்ட நகர்வை மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், அகில இந்திய ஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடு, நிகர்நிலை மற்றும் மத்தியப் பல்கலைக்கழக இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆகியன கலந்தாய்வு மூலமே நடத்தப்படும்.

இந்த கலந்தாய்வு தேதிகளுக்காகக் காத்திருந்த மாணவர்களுக்கு, தற்போது மருத்துவக் கலந்தாய்வுக் குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2025ம் ஆண்டு கலந்தாய்வு அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று மற்றும் இறுதிச் சுற்று என நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. மாநில ஒதுக்கீட்டுக்கான முதல் சுற்று கலந்தாய்வு வருகிற 21ம் தேதியும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வருகிற 30ம் தேதியும் தொடங்குகிறது.

இதைத் தொடர்ந்து மற்ற சுற்றுகள் நடைபெறும். அனைத்துக் கலந்தாய்வு சுற்றுகளும் முடிவடைந்து, மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான கடைசித் தேதி அக்டோபர் 3ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கல்வியாண்டு செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News