தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளிகள்!!

சென்னை: நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் 700க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்லூரிகளில் சேரமுடியாமல் தவித்து வருகின்றனர். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கியது. இந்தநிலையில் 2025 ஆம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற 753 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. வீல் சேர் பயன்படுத்தும் மாணவர்கள், சிறிய குறைபாடுகள் உடைய மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வில் தேர்வு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு நடப்பது, நிற்பது, படிகள் ஏறுவது உள்ளிட்ட 7 விதமான உடல் தகுதிகளை தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ளது.

இதில் ஏதேனும் ஒரு காரணத்தை கூறி அவர்கள் நிகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கலந்தாய்வு குழுவினருக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படாததால் மாற்றுத்திறனாளிகள் விதிமுறைகள் தெரியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவில் கலந்தாய்வு குழுவில் ஒரு மாற்றுத் திறனாளி மருத்துவர் கண்டிப்பாக இடம்பெறவேண்டும் என்றும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மேல்முறையீடு செய்ய குழு அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் இந்த 2 உத்தரவுகளையும் தேசிய மருத்துவ ஆணையம் செயல்படுத்தவில்லை என்றும், இதனால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்றாலும் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.